இழந்த-கடந்தப் பொழுதுகள்
காலைக் கூவும் இன்னோசைக் கேட்டு
தினமும் துயில் கலைந் தெழுவேன் ;
சாலையில் பாடசாலையில் ஆசானடி பணிந்து,
இயற்கையோ டியைந்தே யடியெடுத்தோம்;
கேட்போம் பகுத்தறிவு வளர்க்கும் செம்மலாய்
முவ்வினா கனைகளை தொடுத்து தெளிந்தோம் ;
கற்றோம் கல்வியல்லாது , ஒற்றுமை, போட்டி,
கலைகள் சிலவற்றை பாரம்பரியமா யென்றும் ;
மாலைப் பொழுதில் மட்டையில் முடித்து
கண்டு களிப்போம் கண்கொள்ளா காட்சிகளை ;
கூட்டா யொருக்கூடி வாழையாய் தழைத்து
மூத்தோரின் அன்பை அறிவுரைக் கேட்டோம் ;
விடுப்பை விரையமாகாமல் காடுபல ஏரியென
கழனியில் களப்பணி புரிந்து கூட்டுண்டோம் ;
எங்கேயெனது கடந்தப் பொழுதெண்ணி களிப்பேன்
யான் எந்திரத்தா லியங்கு மாக்களல்லேன் ;
இன்றோ யம்மவது இன்பத்தை புதைத்து
எதிர் தலைமுறையை மறந்தே தொலைக்கிறோம் ;
அன்றோ கண்ணெதிரே களித்த காட்சிகளை
இன்று திரையில் நிழலாக்கும் இளையோன் ;
என்றும் பெருமித் துரைப்பேன் யான்
இருபதினிறுதியில் தழைத்து இருனூறு காண்போன் !
- இருபதின் கடையோன் ! இரண்டொன்றின் இளையோன் !
மா - சங்கர்