அடைமழை
அடை மழையாய் எனக்குள் வந்தவள் நீ!
அன்பே! உன் நினைவுகளால் எனை நனைய வைக்கிறாய்!
புயல்மழையாய் எனக்குள் புகுந்தவள் நீ!
என் இதயப்பூவை சொல்லாமல் பறித்து செல்கிறாய்!
இமயமலையாய் இருந்த என்னை உன் இதழோர புன்னகையால் அசைத்து பார்க்கிறாய்!
உறைந்த பனிமலை நெஞ்சை உன் கண்ணோர பார்வையாலே கரைய செய்கிறாய்!