இயற்கை எல்லாம் இறைவனே
#இயற்கை எல்லாம் இறைவனே..!
அந்தி வானில் மின்னிடும் விண்மீன்
ஆதவன் மறையும் சிவந்த மேற்கு
இருண்ட வானில் நீந்திடும் நிலவு
ஈரம் வார்க்கும் கார்வண்ண மேகம்
உலகம் செழிக்க பொழியும் மழையும்
ஊதக்காற்றின் சிலிர்க்கும் குளிர்ச்சி
எட்டா வானில் மேக ஓவியம்
ஏட்டினில் எழுதா வண்டின் பாடல்
ஐம் பூதங்களின் அழகிய ஆட்சி
ஒவ்வொன்றிலுமே இறைவனின் காட்சி
ஓதிடுவோம் என்றும் இறைவன் நாமம்
ஔவியம் அழித்து வாழ்வோம் நாமும்
அஃதே உயர்ந்திட வழியும் ஆகும்..!
#சொ.சாந்தி-