சிதைவு

பூக்களை உதிர்க்க
தென்றல் வரவில்லை
பெட்ரோல் மணம்
கமழ்கிறது

காடுகளில்
கால் பதித்தச் சுவடுகள்
கருவிகளின் முத்தத்தில்
வெந்து சிதைகிறது

உயிருள்ள உடல்களெல்லாம்
போராட
சிதைப்படும் கிளைகளுக்கு மத்தியில்
சிதைந்து போகும்
எலும்புக் கூடுகள்

வாழ்விடங்களெல்லாம்
வானின் பிம்பங்களாக
வெறிச்சோடிருக்க
சோலைக்காடுகளும்
சோர்விழந்து நிற்கிறது
கான்கீரிட் கட்டிடங்களால்..............

எழுதியவர் : கவியரசன்,மு. (8-Oct-18, 8:38 pm)
சேர்த்தது : முகவியரசன்
பார்வை : 107

மேலே