ஒரு மார்கழி திங்களில்

மார்கழி திங்களில் மதி பொழியும் இரவில் உன்னோடு அலைபேசிய
காலங்கள் கண்ணீராய் வழியுதடி...
உறைய வைக்கும் பனியில்
உற்சாகப் பெருமிதத்தில்
உழன்று உலறிய தருணங்கள்
உணர்சித்து பொங்குதடி...
உன் செவ்விதழ் வார்த்தை
என் செவிதனில் புகுந்து
இருதயம் நனைத்ததடி...
பேசாதிருக்க போட்டி வைத்து
உயிர் போய் திரும்பிய வேளையில்
உன் குரல் கேட்டு மீண்டு வந்தேன்...
பிரிவு நேரும் என்று தெரிந்த வேளையில்
மீளாத தூரம் சென்றவளே...
மீள வருவாய் என காத்திருக்கிறேன்...
இந்த ஆக்சிசன் இல்லா பூமியில்....

எழுதியவர் : சந்தோஷ் (9-Oct-18, 6:41 am)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 77

மேலே