காதல் என்பது மாயை

காதலி கல்யாணப் பத்திரிகை கொடுத்தாளாம்,
தன் ஈமக்கிரியைப் பத்திரிகை எனத் தெரிந்ததாம்
காதலன் கண்களுக்கு;

வயதுக் கோளாறு, இள வயதுக் கோளாறு;
இவனை பெற்றோர் பெற்றது இதற்காகவா!
படித்த படிப்பு எங்கே! கற்ற அறிவு எங்கே!

பெண் என்பதும் காதல் என்பதும் மாயையே!!
பெற்றோர்க்குப் பிள்ளையாய் இரு!
முறையாய் மணந்த பெண்ணுக்கு
நல்ல கணவனாய் இரு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Oct-18, 1:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே