கவனமாய் விளையாடுவீர்

பாயும் காளையை அடக்கிடவே
பதுங்கி நிற்கும் காளையரே,
மேயும் மாட்டைப் பழக்கியேதான்
மாந்தர் அடக்கி விளையாடியது
தூய தமிழர் வீரமானது
தரணி யெல்லாம் போற்றிடவே,
ஓய வேண்டாம் விளையாடுவீர்
உங்கள் நலனுக் கிடர்வராதே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Oct-18, 6:46 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 46

மேலே