அரிமா தானடி நான்
அரிமா தானடி நான்!
என் செய்ய?
ஒரு கையை
இடுப்பின் குறுக்கே வைத்துக்கொண்டு
மறுகையால்
கழுத்தணியை இதழில் வைத்தபடி
அருகில் நீ வருகையில்
ஓர் ஆட்டுக்குட்டியாய்
அவதாரம் பெற்று
விளைந்த கவிதைகளைப்
புற்களாய் மேய்ந்துகொண்டு
இப்படித்தானடி
உன்னைக்காண்கிறேன்!