ஐயோ பாவம்

(ஆனந்தக் களிப்பு )

கவிஞர் பலரும் வந்தாரே -- நமது
நாட்டில் பலபல கவிஞர் வந்தாரே

காவியம் படைக்க வந்தாரே -- இளங்கோ
காவியத் தலைவியாம் கண்ணகி படைத்தாரே

கவிஞர் கம்பரும் வந்தாரே-- வந்து
ஜானகியை நமக்கு சீதாவாக்கிப் போனாரே

கவிஞர் புகழேந்தி வந்தாரே -- அவரும்
அழகுக்கி லக்கணத் தமயந்தியைச் செய்தாரே

கவிஞர் பாரதியும் வந்தாரே --பாரத
காவியப் பத்தினி திரௌபதியை ஏத்தினாரே

கவிகண்ண தாசனும் ஆண்டாரே --அடக்கமாய்
கவிவாலி சினிமாவால் உயரவுயர ஆண்டாரே

கவிஞர்கள் பெண்களைப் புகழ்ந்தாரே--ஆண்டார்
கவிவைரமோ கர்பமோடி யுதவாப் போனாரே **

கவிஞர் ஆண்டாளை ஏசினாரே --ஏனாம்
நாக்கிலே சனியுமுட் காரநாக்கு எகிறிற்றே

கவிஞரும் சினிமாவால் வளர்ந்தாரே --சினிமா
சின்மயீ பெண்சீண்டி அவரும்சீ ரழிந்தாரே



** - வைரத்தினுள் நுரைபோன்ற காட்சி தெரிய அதை கர்பமென்பார்

எழுதியவர் : பழனி ராஜன் (15-Oct-18, 10:15 am)
பார்வை : 267

மேலே