ஐயோ பாவம்
(ஆனந்தக் களிப்பு )
கவிஞர் பலரும் வந்தாரே -- நமது
நாட்டில் பலபல கவிஞர் வந்தாரே
காவியம் படைக்க வந்தாரே -- இளங்கோ
காவியத் தலைவியாம் கண்ணகி படைத்தாரே
கவிஞர் கம்பரும் வந்தாரே-- வந்து
ஜானகியை நமக்கு சீதாவாக்கிப் போனாரே
கவிஞர் புகழேந்தி வந்தாரே -- அவரும்
அழகுக்கி லக்கணத் தமயந்தியைச் செய்தாரே
கவிஞர் பாரதியும் வந்தாரே --பாரத
காவியப் பத்தினி திரௌபதியை ஏத்தினாரே
கவிகண்ண தாசனும் ஆண்டாரே --அடக்கமாய்
கவிவாலி சினிமாவால் உயரவுயர ஆண்டாரே
கவிஞர்கள் பெண்களைப் புகழ்ந்தாரே--ஆண்டார்
கவிவைரமோ கர்பமோடி யுதவாப் போனாரே **
கவிஞர் ஆண்டாளை ஏசினாரே --ஏனாம்
நாக்கிலே சனியுமுட் காரநாக்கு எகிறிற்றே
கவிஞரும் சினிமாவால் வளர்ந்தாரே --சினிமா
சின்மயீ பெண்சீண்டி அவரும்சீ ரழிந்தாரே
** - வைரத்தினுள் நுரைபோன்ற காட்சி தெரிய அதை கர்பமென்பார்