வாழும் கலாம்

*.... வாழும் கலாம்...*

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
இராமேஸ்வரம் பெற்றெடுத்து
பாரதம் வளர்த்தெடுத்து
மேகாலயாவில்
பறித்தெடுத்து
பேக்கரும்பில்
விதைபட்ட
*பாரத ரத்னா* பெற்றிட்ட
பாரதத் தாயின் ரத்தினமே

செய்தித்தாள் சுமந்த உன்னை இன்று
செய்தித்தாள் சுமக்கிறது
நீ மண்ணில்
உதித்த தினம்
உலகிற்கே மாணவர் தினம்

பாரதத் தாயின் மகுடத்திலே
பதிக்கப்பட்டு ஜொலித்திட்ட
பதினோராம் இரத்தினமே --உனை
பார் போற்றும் அனுதினமே

பட்ஜெட்டில் எழுதிவிட்டு
பாக்கெட்டில் நிரப்பிக் கொள்ளும்
அரசியலார் வாழும் நாட்டில்
ஊதியமன்றி ஒரு காசை
ஒரு நாளும் எடுத்தறியா
பார்போற்றும் பண்பாளன்

கனவுதனைக் காண சொன்னாய்
கண்டு விட்டோம்
கஷ்டமில்லை
அங்கும் கூட உனைப்போன்ற
அரிய மனிதர் யாருமில்லை

நான்கு ரூபாய் பணத்துக்கு
நாவடக்கக் கற்ற நீ
அன்று முதல் அடியோடு
அசைவத்தையே விட்டொழித்தாய்

அணு ஆயுத சோதனையில்
அன்று நீ தைரியமாய்
பொக்ரானில்
போட்ட வெடி
சத்தம் கேட்டு பல நாடு
சலனம் குறைத்தது அடுத்த நொடி

மண்ணில் பலரும் பிறக்கலாம்
மனிதனாயும் வாழலாம்
சொத்தும் நிறைய சேர்க்கலாம்
சொந்தம் பலவும் இருக்கலாம்

பிறந்தால்..

உன்னைப் போல
பிறக்கனும்
உதிர்ந்த பின்னும்
மணக்கனும்
மண்ணில் மனிதம் உள்ளவரை
மக்கள் மனதில் நிலைக்கனும்..

க.செல்வராசு..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எழுதியவர் : க.செல்வராசு (15-Oct-18, 12:18 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vaazhum kalaam
பார்வை : 121

மேலே