மின்னொளி பாய்ச்சினாள் நெஞ்சிலே
அவனது விழிக்கு வசீகர விருந்து
வைத்தது வளைந்து ஒடிய முனையும்
அவளது முல்லை இடை
விலகிப் போனதால் அதன் உடுக்கை
அவன் நெஞ்சிலே மின்சாரம் பாய்ச்சியது
மேலே பஞ்சணை மெத்தை வைத்துத்
தைத்த அவள் பொன் வதனப் படுக்கை
அஷ்றப் அலி