உன் மௌனஇதழ்ப்புத்தகம் திறக்கவில்லையானால்
நிலவுகள் நூறு
வந்தென்ன போயென்ன
நீ வராத மாலை வெறுமையே !
கனவுகள் நூறு
வந்தென்ன கலைந்தென்ன
நீ வராத கனவு பொய்யே !
புத்தகம் நூறு
திறந்தென்ன படித்தென்ன
உன் மௌனஇதழ்ப்புத்தகம் திறக்கவில்லையானால்
அந்தியின் கவிதையை அதில் படிக்கவில்லையானால் ...?