உன் மௌனஇதழ்ப்புத்தகம் திறக்கவில்லையானால்

நிலவுகள் நூறு
வந்தென்ன போயென்ன
நீ வராத மாலை வெறுமையே !

கனவுகள் நூறு
வந்தென்ன கலைந்தென்ன
நீ வராத கனவு பொய்யே !

புத்தகம் நூறு
திறந்தென்ன படித்தென்ன
உன் மௌனஇதழ்ப்புத்தகம் திறக்கவில்லையானால்
அந்தியின் கவிதையை அதில் படிக்கவில்லையானால் ...?

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-18, 7:25 pm)
பார்வை : 59

மேலே