மேகம்
=======
கடலோடு அலையாகக் களிப்பாடி நின்றேன்
=காற்றாலே விண்ணேறி குடிகொண்டு விட்டேன்
உடலின்றி உயிரின்றி உயரத்தில் நின்றே
=உலவும்நான் மக்கள்தம் உள்ளத்தி னுள்ளே
அடடாபே ரழகென்று ஆனந்தம் கொள்ள
=அந்தரத்தில் ஊஞ்சலுமே ஆடிடுவேன். ஓர்நாள்
விடாமலடிக் கும்மழையாய் விவசாயிக் காக
=விண்ணின்று பொழிந்தந்த வயல்மேட்டில் வீழ்வேன்,
**
மெய்யன் நடராஜ்