தனிமை

நான்கு சுவற்றுக்குள் அடைபட்டிருந்தாலும் நாற்புறமும்
உன் முகம் தான் தெரியுதடா
நடந்து செல்லும் போதும் உன் கைகோர்த்து சென்றதுதான் நினைவுக்கு வருகிறதடா
உண்ணும் பொழுதும் நீ ஊட்டிவிடும் உணர்வுதான் தெரிகிறதடா
உறங்கும் வேளையிலும் உன் உருவதைத்தான் கனவில் காண்கிறேன்னடா
யாருமில்லாத தனிமையில் நான் இருந்தாலும்
நீ அருகில் இருப்பதாய் நினைத்துதான் வாழ்கிறேன்னடா
உடல் இரண்டும் பிரிந்தாலும் உள்ளம் பிரியாதே
உலகத்தின் ஏதோ ஓர் மூளையில் நான் பிரிந்து சென்றாலும்
என் இதய துடிப்பிலும் சுவாசத்திலும்
உன் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டேயிருப்பேன்னடா !!!

எழுதியவர் : M.Chermalatha (18-Oct-18, 4:59 pm)
Tanglish : thanimai
பார்வை : 798

மேலே