நாம ரண்டு பேரும் ஆசிரமத்துக்குப் போயிடலாம்

அப்பா...

என்னடா இளவரசா?

இந்த சமுதாயத்தில ஆண்களுக்குப் பாதுகாப்பு இல்ல.

என்னடா சொல்லற?

திடீர்னு நம்ம கடைல வேல பாத்து நின்னுட்ட பாட்டிங்க யாராவது வந்து நீங்க அவுங்கள இருபது வருசத்துக்கு முன்னாடி பாலியல் தொந்தரவு குடுத்தீங்கன்னு எதாவது செய்தித் தாள் அலுவலகத்தில சொன்னா நம்ம மான மரியாதை என்ன ஆகறது?

ஆமாண்டா தொலைக் காட்சிச் செய்திகளைப் பாக்கறபோது நீ சொன்னமாதிரி ஆண்களுக்கு இந்தச் சமுதாயத்தில பாதுகாப்பு இல்ல.

அதுக்குத்தாப்பா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொன்னது. நம்ம சொத்துல மூணுல ஒரு பங்கை அம்மாவுக்கு குடுத்து அவுங்கள மாமா வீட்டில விட்டிடுவோம். மீதிச் சொத்தை வித்து பணத்தை எடுத்திட்டு நாம ரண்டு பேரும் நித்தியானந்தா ஆசிரமத்துக்குப் போயிடலாம். நம்ம ரண்டு பேரு பங்கும் ரண்டு கோடி. அத அந்த ஆசிரமத்தில குடுத்திட்டு உயிருள்ளவரைக்கும் நிம்மதியாய் வாழலாம்.

சரிடா. அடுத்த வாரம் நாம ஆசிரமவாசிகள். இந்த உலக வாழ்க்கையே வேண்டாம்.

எழுதியவர் : மலர் (18-Oct-18, 9:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 84

சிறந்த நகைச்சுவைகள்

மேலே