பூவும் பூவையும்
பூக்களை ஸ்பரிசிக்கும் போது
பூவாய் மாறி நீ பூவையானாய்
நடைவாக்கில் முகர்ந்தாலோ
நறுமணமாய் வியாபிக்கிறாய்
வீட்டில் காட்டில் தோட்டத்தில்
விதம் விதமாய் பூத்திருக்கிறாய்
ஏட்டில் எழுதாத கவிதையாக
என்னையே நீ பார்த்திருக்கிறாய்
பூவையுன் கூந்தலில் மலரெதுக்கு
கூந்தலின் மணமே போதுமெனக்கு
நக்கீரன் வார்த்தை பொய்யில்லை
மணமில்லா கூந்தல் உலகிலில்லை