முதுமொழிக் காஞ்சி 70
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வாலிய னல்லாதோன் தவஞ்செய்தல் பொய். 10
- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் மனத்தின்கண் ‘தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய்.
(ப-ரை.) வாலியன் அல்லாதோன் - மனத்தில் பரிசுத்தம் இல்லாதவன், தவம் செய்தல் - தவத்தைச் செய்தல், பொய் - பொய்யாம்.
வாலியன் - (வால் - சுத்தி, இ - சாரியை) சுத்தியுள்ளவன் -சுத்தன்.
சுத்தமனமுள்ளவனே தவஞ்செய்தற்கு உரியவன்.
வாலியனல்லாதோன் என்பது
'மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி .
மறைந்தொழுகு மாந்தர் பலர்' 278 கூடா ஒழுக்கம் (திருக்குறள்) என்பதனால் விளக்கும்.