திருமண நாள்
என் மனைவியை என் மனைவியை !!!
உனக்காக மல்லிகைப் பூ ஆசையொடு வாங்கியதில்லை !
உன்னோடு உரையாட நிமிடங்கள் நேரங்கள் ஆனதில்லை !
உனை காணும் ஆவலுடன் அவசர அவசரமாக
அலுவலகம் முடித்து வீடு வந்ததில்லை !
உணவு இடைவேளையில் நீ உணவு உண்டாயா என
விசாரித்ததில்லை !
இரவும் பகலும் இணையும் வேளையில் நான்
உன் உறக்கத்தை ரசித்ததில்லை !
உனக்காக ஒருநாள் கூட சமயலறையில் கூட்டாஞ்சோறு
சமைத்ததில்லை !
ஏனோ !!
இனி எல்லாம் கற்றுக்கொள்ள ஆவல் கொண்டேன்.....
உனக்காகவே என் ஆசை மனைவியே...