என்னவள் அழகு
இளமையில் உன் கட்டழகில்
என் மனதை ஈர்ந்தாய்
இந்த முதுமையிலும் நீ
கொள்ளை அழகே ,உன்
குறையேதுமில்லா நிறை
மனதால் , நீ என்மீது
காட்டும் தாய்யன்பால்
குணக்குன்றாய் நீ
என்னை ஈர்க்கிறாய்
அகத்தின் அழகியாய்
அழகாய்...என்னவளே
காலம் குலைக்க முடியா
அழகி என்பேன் என்றும்
எனக்கு .