விட்டெறிந்தான் வீணையை
விட்டெறிந்தான் வீணையை கோபத்தில்
வேதனையிலும் ஏதோ சுரம் பாடி அமைதியானது வீணை !
கலைவாணியின் கையெழிலை பூஜைப் பொருளை
இப்படி புழுதியென விட்டெறியலாமா என்றாள் மனைவி !
சோறுபோடாத இதை மீட்டி என்ன பயன் என்றான் வீணைக் கலைஞன் !
ஒருவன் நுழைந்தான்
நவராத்திரி ஒன்பது நாளும் மாலையில் உங்கள் வீணைக் கச்சேரி
இதோ முன்பணம் என்றான் வீணா கான சபா செயலன் !
அவள் அவனைப் பார்த்தாள்
அவன் வீணையைப் பார்த்தான்
வீணை என்னை மீண்டும் மீட்டு என்றது !