அழகியே உன்னைத்தவிர

அழகிய கவிதை ஒன்னு
அழகா நாவடிக்க
அழகியே நீ கிடைச்ச,
அக்கம் பக்கம் தேடிப்பாத்தேன்
அயல்நாடும் அலசிப்பாத்தேன்
அழகியே உன்ன தவிற
அழகேதுமில்ல,
அழகியே உன்ன தவிற
அழகேதுமில்ல !

அவசரம் எனக்கேதுமில
அரவணைக்க நீயிருக்க
அன்போடு நானேற்க
அண்டமும் வியந்து நிக்க
அகிலமாய் நாமிருப்போம் --- அழகியே

அலையிலே உன்சிரிப்பாக
அன்பிலே என்னுயிராக
அத்தனையும் நீயாக
அடுத்தவரும் வியப்பாக
அண்ணாந்துபாக்க அளவாக
அளாப்பிக்க அயலாக
அரவணைப்பில் சாய்தாயடி- அழகியே
.....

எழுதியவர் : ச. சோலைராஜ் ! (23-Oct-18, 3:46 pm)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 676

மேலே