அழகு

எனக்கு ஒரு சந்தேகம் .....
தலையை வாரிட்டு சடைகள் தொடுத்தபோதும் , பணியாமல் தென்றலின் பாட்டுக்கு தலையசைக்கும் சுருள் முடி அழகா??
பாரதியின் தங்கைதான் என்று வியக்கும் அளவிற்கு பளிரென்று செந்தூரம் பூசியே செந்நெற்றி அழகா???

நெற்றிக்கு பக்கத்தில் அல்லிமொட்டுகள் மலர்ந்ததை போன்று உள்ள விழிகளின் நடுவே அம்புகள் பாயும் மிரட்சி பார்வையை தன்னகத்தே கொண்டுள்ள அவள் கண்ணழகா???
கண்களுக்கு கீழே என் முத்தத்தால் குழிவிழுந்ந
அவள் கண்ணம் அழகா???
அழகற்ற வார்த்தைகள் கூட அழகான இன்னிசையாக கவிபாடும் செவ்விதழ் அழகா???
மயிலிறகு கூட காயங்கள் ஏற்படுத்தும் மென்மைபொருந்திய இடைஅழகா???

கடல் கரையில் கரையை நோக்கி போட்டியிட்டுத் கொண்டு ஓடிவரும் அலைகள் நீ நடந்து விட்டுச்சென்ற பாதச் சுவடுகளை தொட்டுச் செல்லத்தான் என்பது யாருக்கும் தெரியாத உண்மை...இந்த பெருமைக்குரிய பாதமலர் அழகா???

இத்தனை அழகு பொருந்திய பெண்ணவள்....
இவள் அழகின் உச்சம் எதுவென்று கேட்டால் அவள் காதலனாக நான் சொல்வது.......

இத்தனை அழகு பொருந்திய அவள் தன்னை அழகி என்று உணர்ந்தும் கர்வம் கொள்ளாமல், உள்ள அவள் பெண்மை தான் அழகின் உச்சத்தில் ஊஞ்சலாடிக்கொண்டுஇருக்கிறது.....

எழுதியவர் : செல்லப்பாண்டி செ (23-Oct-18, 4:40 pm)
சேர்த்தது : செல்லப்பாண்டி செ
Tanglish : alagu
பார்வை : 399

மேலே