வெளிநாட்டு பிழைப்பு

ஐந்து நூறு காசு சேர்த்து
வெளிநாடு போய் நான் சேர்ந்தேன்.
மொழியும் தெரியலை
திசையும் புரியலை
சோறும் பிடிக்கலை.
எல்லாம் பழகிடும்
பக்கத்தில் நண்பன் சொல்ல
நானே பழக்கிகிட்டேன்
குடும்பத்து சந்தோஷத்துக்காக.
முதல் மாத சம்பளத்தை மணியாடர்
அனுப்பி வைத்தேன்.
இருந்த கடன் அத்தனையும்
அடைததென்று அம்மா சொல்ல.
கையோடு தங்கை கல்யாண ம்
புகைப்படமும் வந்து சேர்ந்தது வாட்சப்பில்.
அயல் நாட்டு வாழ்கையில் தனிமை தான்
சொந்தமாக போனது என்ன.
சிறகு இருந்தும் பறக்காத
பறவை ஆகிதான் போனேன் நானும்.
அம்மாவோட நினைவுகள் வந்து செல்ல
புகைபடத்தை கண்ணீர் கொண்டு நினைத்துவிட்டேன்.
ஊர் நினைப்பு என்னை கொள்ள
விஷமில்லாமல் சாக ஆரம்பித்தேன்.
போதுமடா வெளிநாட்டு பிழைப்பு
என்று தான் நினைத்தபடி
சிறகு கொண்ட பறவையாய்
சொந்த தேசத்திற்கு பறந்து வந்தேன் ....

எழுதியவர் : கிருபாகண்ணன் (26-Oct-18, 12:55 pm)
சேர்த்தது : கிருபாகண்ணன்
Tanglish : velinaattu pilappu
பார்வை : 136

மேலே