இலக்கியம் உயிர் பெறுகிறது
கவிதையும்
கதையும்
கதைக்க
தமிழ் இலக்கியம்
மெல்ல
உயிர் பெறுகிறது
தலை முறை தலை முறையாக
பல மொழி
பிறப்பினும்
எந்தன்
தமிழ் மொழிக்கு
இறப்பு இல்லை
என்றும்
அத்தனை உயிரினமும்
முதலில்
எந்தன் மொழியை
தான்
பேச விரும்புகிறது
பிற மொழி பயின்றாலும்
தனி பிரியம் தான்
உன்னை (சு)வாசிக்க
மூச்சு காற்றாய் என்னை
வாழ வைப்பதால்
விட்டு கொடுக்க
நம் கலாச்சாரம்
சொல்லி கொடுத்தது
நம்
கலாச்சாரத்தை அல்ல
வள்ளுவன், பாரதி என
நம்முடன் வாழ்ந்த
தெய்வங்கள் பல
நம் முன்னோர் மரணித்தாலும்
இதுவரை
தமிழை மரணிக்க விட்டு விடவில்லை
நாம் விட்டு விட வேண்டாம்
தாங்கி பிடிப்போம் நம் தமிழை ........
கொஞ்சம் திமிர் அதிகம்
தான் நமக்கு
தமிழனாய் பிறந்து விட்டதால்
அல்ல
தமிழோடு வாழ்வதால்
ஆங்கில - தமிழ் அகராதியை
தேடி கொண்டு இருந்த நான்
தமிழ் - தமிழ் அகராதியை
தேடுகிறேன்
தமிழுக்கு உயிர் கொடுக்கும்
முயற்சியில் அல்ல
காதலிக்க முயற்சி செய்கிறேன் தமிழே உன்னை ..............