கனவு உலகம்

நித்தம் நித்தம் கனவில் வருபவன்
நிஜத்தில் வந்தாலும் கனவு போல
தோன்றுகிறது அவளுக்கு
அவள் கனவிலே வாழ்ந்து மடிந்தாலோ என்னவோ
நிஜத்தில் வந்த உருவத்தை ஏற்க மறுக்குது மனசு
கனவை நினைத்து ஏங்கி தவிக்கிறாள் ..
நிஜ உலக வாழ்க்கையின் மீதுள்ள பயமோ
என்னவோ
கனவு உலகமே போதும் என்கிறாள் பெண்ஒருத்தி !!!

எழுதியவர் : priya (30-Oct-18, 12:19 pm)
Tanglish : kanavu ulakam
பார்வை : 2135

மேலே