வெற்றிடம்
விதைத்தேன் விதையை
கவிதையில் அன்று
சுவைக்கிறேன்
கவிச்சுளையில்
இன்று
கவிசோலையை
அறுவடை செய்வது
என்று
வெற்றிடம் என்றும் இல்லை
நீ என்னுடன்
தினம் பயணிக்கும் போது
தனித்து நின்றும்
மலர்களால் கோர்த்த மாலைகள்
காண புத்துணர்ச்சி
வார்த்தைகளில் கோலம் போடுது
என் கைகள்
அலங்கோலம் இல்லாமல்
இது புது உணர்ச்சி