அவள்
காற்றும் விலகிப் போகும்
காகிதமோ வார்த்தை சொல்லும்
முள்ளும் மடிந்து போகும்
மூச்சோ உறைந்து போகும்
மொட்டும் மலர மறக்கும்
மௌனமும் பேசத் துடிக்கும்
சூரியனும் குளிர்ந்து போகும்
சந்திரனும் ஒளியிட வெறுக்கும்
சகலமும் மாறிப் போகும்
சான்றாய் யாவும் அமையும்
-அவள் வரும் பாதையிலே…