தீபாவளியே வருக
தூய்மையான தீபாவளி துன்பங்கள் இல்லையினி/
ஏழ்மையை ஒழித்தே ஏற்றிடுவோம் தீபமினி/
மத்தாப்புச் சிரிப்பால் மனங்கள் நிறையட்டும்/
முத்தான நகைப்பில் முழுநிலவு ஒளிரட்டும்/
நித்தமும் இல்லத்தில் மகிழ்ச்சியே நிலவட்டும்/
சித்தமும் சிறந்தே சிந்தனையும் செழிக்கட்டும்/
கரியாகும் தீமையால் அகிலமே மிளிரட்டும்/
அரியென இளையோர்ச் சீறியே பாயட்டும்/
பரிவோடு பண்பும் பாரினில் பரவட்டும்/
பிரியாமல் உள்ளங்கள் பிணைந்தே இருக்கட்டும்/
மழையோடு பனியும் இதமாகப் பொழியட்டும்/
அழைக்காமல் மேகமும் கருணையே காட்டட்டும்/
உழைக்கின்ற உழைப்பாளி உளமும் களிக்கட்டும்/
தழைக்கட்டும் பசுமையும் இயற்கையும் நிலைக்கட்டும்/
பொன்னான நன்னாளைப் பொலிவோடு வரவேற்போம்/
அன்போடு பெரியோரை வணங்கி மகிழ்ந்திடுவோம்.
கி.இலட்சுமி,சென்னை.