ஒரு காகத்தின் அதிகாலை குரல்

ஒரு காகத்தின் அதிகாலை குரல்
சரவணன் தனது 25 வயது முடிய வாழ்ந்து வந்தான். 25 வயதில் நான்கு ஆண் குழந்தைகளையும் அவனது காதலியும் அத்தை மகளுமான பொற்கொடியை தனியாக விட்டுவிட்டு இறந்து போனான்.

எஸ்.செந்தில்குமார்
எழுத்தாளர் ஜெயகாந்தன் இறந்த அன்று மாலை என்னை சந்திக்க தமிழாசிரியர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும், அவருடைய படைப்புலகம் பற்றியும் தனக்குத் தெரிந்ததை பேசிக்
கொண்டிருந்தார். தமிழிலக்கியத்தின் எதார்த்தமான படைப்பாளி என்று புகழ்ந்தார். அக்னிபிரவேசம் கதையை தமிழின் உச்சபட்ச சாதனை கதையாகும் என்று அவர் சொன்னார்.
நான் கேட்டேன். “உங்களது வீட்டில் உங்களது பெண்கள் யாருக்காவது இப்படி ஒரு சம்பவம் நடந்து நீங்கள் ஒரு பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றிவிட்டு உனக்கு எதுவும் நடக்கவில்லை என்று அப்பெண்ணையும் உங்களது குடும்பத்தையும் சமாதானம் செய்வீர்களா? அவர்களும் நடந்ததை மறந்து சகஜநிலைக்கு வந்தடைந்துவிடுவார்களா? அவர் அமைதியாக இருந்தார். அவர் என் மேல் கோபமாக இருக்கிறார் என்பது அவருடைய முகத்தில் தெரிந்தது.
அப்படியென்றால் எதார்த்தம் என்பது என்ன? அக்னிபிரவேசத்தில் ஒருவாளி தண்ணீரை தலைக்கு ஊற்றிவிடுகிற சம்பவத்தின் மூலமாக எழுத்தாளர் என்ன சொல்ல விரும்புகிறார். அதன் மூலம் இந்த உலகத்தை எப்படி மதிப்பிடுகிறார் என்று அவருடன் விவாதிக்க முயன்றேன். அவர் திரும்பவும் ஜெயகாந்தனின் புகழை மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். சமூக மதிப்பிடுகளையோ அக்கதை
சார்ந்த விமர்சனத்தையோ அவர் பேசுவதற்கு தயாராக இல்லையென்பது அவர் பேச்சின் மூலமாக தெரிந்தது.
பொதுவாக பெண் என்பவள் ஒரு ஆணின் மதிப்பிட முடியாத சொத்துக்களில் ஒன்றாக இருந்து வருகிறாள். பெண் வழி சமூகத்தில் ஆணை அடைவதிலும், பங்கீடு செய்வதிலும் நிலவிய போட்டியே ஆண் வழி சமூகத்தில் தொடர்கிறது. ஒரு ஆண் தனது சொத்தை இழக்க நேரிடும் போது அடைகிற வேதனையை விட தான் அடைய முடியாத பெண்ணை நினைத்து பன்மடங்கு வேதனையோடு இருக்கிறான் என்பதே நிஜம். அத்தை மகள், மாமா மகள் என்பதெல்லாம் தனது பூர்வீக ரத்த உறவு சார்ந்தது என்று ஆணின் மனபிம்பத்தில் படிந்துள்ளது.
பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படம் இந்த வகைமையில் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்லவேண்டும். அந்த மண் சார்ந்த சித்திரங்களைப் போன்ற அசல் பிரதிகளை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். பெண்ணை தனது உடமையாக்கிக் கொள்ளும் விருப்பமும் கொடுரமும் தேவையும் ஆண்களிடம் காலந்தோறும் இருந்துவந்துள்ளது. இது கிராமங்களில் மட்டுமல்லாது
நகரங்களிலும் இப்பழக்கவழக்கம் இருந்து வந்துள்ளது.
இளங்கலை வணிகவியல் படித்துவிட்டு ஐந்தாம்வகுப்பு முடிக்காத டுவீலர் ஒர்க்‌-ஷாப் மெக்கானிக்கை கல்யாணம் செய்து கொண்ட பெண்ணும், கால் ஊனமுற்றப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளையும் தன் அத்தை மாமாவையும் காப்பாற்ற வேண்டுமென வங்கி வேலைக்கு தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் நண்பனையும் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதர்கள் என்று சொல்லலாம். தன் அத்தை மகனை திருமணம் செய்து கொள்ளமுடியவில்லை என்பதற்காக கிணற்றில் விழுந்து இறந்தவளும், மாமா
மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லையென்பதற்காக கடைசி வரை திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருபவனையும் எந்த இதிகாசத்தில் எழுதுவது?
சரவணனும் பொற்கொடியும் அப்படிப்பட்ட மனிதர்கள்தான். சரவணனின் தாய்மாமாவின் மகள் பொற்கொடி. பிறந்தது முதல் பொற்கொடி சரவணனுக்குத்தான் என்று பேசி வைத்துவிட்டார்கள். சரவணனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததிலிருந்து குடிப்பழக்கம். நோய்வாய்ப்பட்ட அம்மாவின் மரணம். பாட்டியின் செல்லப்பிள்ளை அவனை நிரந்தரமான குடிகாரனாக்கியது.
திருமணம் செய்து கொண்டால் மாமா சரவணனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பொற்கொடி பத்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்குச் செல்லவில்லை. இருவீட்டினரும் பேசி இளவயதிலேயே (18வயதில்) இவருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். குடிப்பழக்கமும் குடிகார நண்பர்களும் சரவணனின் வாழ்க்கையில் தொடர்ந்தார்கள். சரவணனுக்கும் பொற்கொடிக்கும் வரிசையாக நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்தன.
சரவணனுக்கு தினமும் பணம் கிடைத்தது. சரவணனின் அப்பா, மூன்று ஆட்டோக்கள் வாடகைக்கு விட்டிருந்தார். இரண்டு வேன் ஓடியது. இத்துடன் வாடகை பாத்திரக்கடை வைத்திருந்தார். சரவணன், சமையற்காரர்களை தேடிப் பிடித்து குடிக்கு பணம் சேர்த்துவிடுவான். பாட்டி அவன் மேல் பிரியமாக இருந்ததால் சோற்றுக்கும், பொற்கொடி அவன் பிரியமாக இருந்ததால் படுக்கைக்கும் குறைவில்லாமல் இருந்தது.
சரவணனுக்கு தினமும் குடிக்க வேண்டும். குடித்து விட்டு வீட்டு வாசலில் அமர்ந்து பெண்களைப் போல புலம்புவான் இல்லையென்றால் பழமை பேசிக்கொண்டிருப்பான். எச்சில் வடியும். எதிரே அமர்ந்திருப்பவர்களின் மு

எழுதியவர் : உமாபாரதி (5-Nov-18, 12:25 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 99

சிறந்த கட்டுரைகள்

மேலே