காத்திருப்பேன் உனக்காக

என்னை காத்திரு
எனச் சொல்லி போனவனே
காத்திருப்பதில் எனக்கு சுகமே
கருவிழியில் உனை சுமந்து
கார்மேகமாய் விரவியிருப்பேன்
கற்சிலையாக நான்
கரையான்களை புற்றுகள்
அழிக்கும் காலமிது
பெண்மையையும் ,வயதையும்
இன்ன பிறவற்றையும் சுட்டிக்காட்டி
சொல்லம்புகளால் துளைத்து
சொல்லொணா துயருக்கு ஆளாக்கி
முள்படுக்கையில் தள்ளிவிடுவர்
முற்றுப்புள்ளி வைத்து விடாதே
தொடர்கதையாக மாற்றிவிடு
ஆழ்கடலில் மூழ்கி எடுத்த
அரிய தேடல் நீ எனச் சொன்னவனே
ஆண்டுகள் பல கடந்தாலும்
காத்திருப்பேன் உனக்காக
கந்தர்வ கன்னியாக நான் !!!!!

எழுதியவர் : உமாபாரதி (7-Nov-18, 4:41 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 693

மேலே