பல்லவன் செதுக்காப் பளிங்குப் பாவையே
பொய்களையெல்லாம்
கற்பனை என்று
புத்தகத்தில் எழுதிவிடலாம்
பூக்களை எல்லாம்
புதுப் புது
உவமைகளில் சொல்லிவிடலாம்
புதுமையை எல்லாம்
அறிவியல் என்ற
அகராதியில் அடைத்துவிடலாம்
பார்க்கும் உன் விழிகள் என்னுள்ளே
தோற்றுவிக்கும்" ராமன் "விளைவுகளை
எந்த வார்த்தைகளில் எழுதுவேனடி
பல்லவன் செதுக்காப் பளிங்குப் பாவையே !