விதி
கருவறையில் உருவாகும் போதும்
உன் பெயர்தான்
கல்லறையில் சருகாகும் போதும்
உன் பெயர்தான்.......
ஒவ்வொரு வெற்றியின் பின்னனியில்
உன் பெயர்தான்
ஒவ்வொரு தோல்வியின் முன்னனியில்
உன் பெயர்தான்....
ஆடம்பறங்களின் அடைக்கலமாக
உன் பெயர்தான்
ஆதரவற்றவர்களின் ஆகாரமாக
உன் பெயர்தான்....
மாளிகையானாலும்
உன் பெயர்தான்
மண்குடிசையானாலும்
உன் பெயர்தான்....
கடவுளுக்கு முன்னால்
உன் பெயர்தான்
கவலைக்கு பின்னால்
உன் பெயர்தான்.....
விருப்பமென்றாலும்
உன் பெயர்தான்
வெறுப்பென்றாலும்
உன் பெயர்தான்.......
இயற்கை அசைவில்
உன் பெயர்தான்
இதய அசைவில்
உன் பெயர்தான்......
ஒற்றை உயிரணுவில்
உடல் கூடுகளைப் படைத்து -- அதில்
ஏற்றத்தாழ்வுகளை வைத்து
ஏளனமாக பார்க்க விரும்பியதும்
உன் விளையாட்டுதானா ??...
உருவம் காணத உன்னை
இந்த உலகம்
ஏற்றுவதும்
தூற்றுவதும்
என்றேனும் "விதியே"
உன் காதில் விழுந்ததுண்டா????