வலி துற நையாண்டி மேளம் இரண்டாம் பாகம்
வலி துற
மருமகளின்
தனிச்சுதந்திரம்
குடும்பத்தின் மொத்த
சுதந்திரத்திற்கு எதிர் ;
மகனின்
மனஅலைகள்
பொங்கும்
கடலலைக்கு நேர் ;
மனைவியின்
அறிவு ஓட்டம்
பலநேரம்
கவலைக்கிடம் ;
அடக்கம் அதிகம்
பயின்றதினால்
அதிகார உறவினர்
ஏவலுக்குப் பலி ;
உலகியல் சரியாகப்
புரியாததால்
சாமர்த்திய நண்பர்
கேலிக்குக் குறி ;
நாளிதழ் திறந்தால்
வஞ்சனையில் வீழும்
கணவன் மனைவியர் தலை -
வாழ்க்கை இனிமையானதே
வலி துறந்து வாழக் கற்றால் !
********