குழலும் வீணையும் போல்

ஒரு இனிய புல்லாங்குழல்
எடுத்து வாசிப்பார் இல்லை !
ஒரு இனிய இசை வீணை
எடுத்து மீட்டுவார் இல்லை !
ஒரு மலர்நிகர் இளம் பெண்
கைப்பிடிக்க ஆளில்லை !

குழலும் வீணையும் போல்
பெண்ணும் மௌனத்தில் கண்ணீர் வடித்திருந்தால்
மண்ணில் மானுடம் வாழ்வது எப்படி ?

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-18, 9:42 am)
பார்வை : 98

மேலே