என்னை பெத்த தாயே

கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி விட்டு இரவு பகல் என்று பாராமல் கல்லூரி மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம், வீண் சோலியெல்லாம் எதுவும் கிடையாது அதாவது இந்த காதல் கத்தரிக்காய் போன்றவையில் சிறிதும் நாட்டம் கிடையாது

இது அவள் பக்குவத்தின் அடையாளம் வீணில் துரு பிடிப்பதை காட்டிலும் தேய்ந்து போவதே மேல் எனும் நீதியை கடைபிடிப்பவளாக திகழ்பவளே

கல்லூரி செல்வது வீட்டுக்கு வருவதும் அவள் வேலை, யாருடனும் அனாவசியமாக பேசுவதும் இல்லை, யாரும் பேச்சு கொடுத்தாலும் ஓரிரு வார்தையில் பேச்சை முடித்துக் கொள்வாள்

தன்னை திறமைசாலி என்று நினைதால் போதும் அதிலும் தளராமல் இருந்தால் கண்டிப்பாக திறமைச்சாலி ஆகிவிடலாம் எனும் நம்பிக்கை கொண்டிருந்தாள்

மிகச்சிறந்த பேரும் புகழும் கடின உழைப்பாலேயே வரும் என்ற வழியில் செல்பவள்

கல்லூரியில் சில மாணவர் மாணவியரோடு இடை இடையே அரட்டை அடித்து மணவர்களை உர்சாகப்படுத்துவது வழக்கம்

அவர்களோடு பேசுவதால் அவளின் சஞ்சலம் குறைவது போல் உணர்வாள் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்வாள்

உள்ளத்தில் உள்ள குமுறலை புகையவும் விடமாட்டாள், புகைந்தால் பிறருக்கு ஏளனமாக தோன்றலாம் அதை வைத்து வாயில் வருவதை யெல்லாம் பேசிடக்கூடும் அதை கேட்டு தாங்கிக் கொள்ளும் போதிய சக்தி நம்மிடம் இல்லை என்று உணர்வாள்

சில சமயங்களில் மேடம், வகுப்புக்குள் வர தாமதமானதால், மாணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டது "இன்னும் கல்யாணம் ஆகவில்லை அதனால் வீட்டில் பிள்ளை குட்டிகள் இல்லை ஆனாலும் மேடம் தாமதமாக ஏன் வருகிறார் என்று பேசிக் கொண்டதை மேடம் காதில் விழுந்தது கேட்டும் கேட்காதது போல் காட்டி க்கொண்டாள் தனது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு

நான் தாமதமாக வருவதின் காரணம் உங்களுக்கு தெரியவேண்டும் அவ்வளவுதானே நான் சொல்லப்போவதை பொருமையோடு கேட்கக்கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு இருக்குமா என்று எனக்கு தெரியவில்ல ஆனாலும் அதை சொல்வதால் என் மனபாரமும் லேசாகலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் ஆனால் தூங்கிவிடக்கூடாது

ஒரு மீனவன் இருந்தான் அவனுக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தது, தினம் கடலுக்கு போவான், அவனை போல மீனவர்களும் போவார்கள் இவனுக்கு மட்டும் நிறைய மீன்கள் கிடைக்கும் வீட்டில் எல்லோருக்கும் சாப்பாட்டுக்கு ஒரு குறையும் இல்லாதிருந்தது

சக மீனவர்கள் பொறாமை கொண்டார்கள் அடே உனக்கு கிடைப்பது போல் மீன்கள் எங்களுக்கு கிடைக்குமானால் இந்த ஊரையே விலைக்கு வாங்கி விட்டிருப்போம் ஆனால் இவ்வளவு மீன்கள் உனக்கு கிடைத்தும் நீ ஒன்னும் வாங்க முடியவில்லையே என்று ஆசையை கிளப்பிவிட்டார்கள்

அவர்கள் சொல்வதும் சரிதான் ஐந்து பிள்ளைகள் கணவன் மனைவியை சேர்த்து மொத்தம் ஏழுபேருக்கு குறைவில்லை பேசாமல் ஒரு பிள்ளையை கொன்றுவிட்டால் அதன் பங்கு மீறும் அதை சேர்த்து பிடித்தால் நாம் பணக்காரர் ஆகிவிடலாம் என நினைத்து ஒரு பிள்ளையை கொன்று விட்டான், அதற்கு செய்ய வேண்டிய காரியங்கள் செய்து விட்டு ஒரு வாரம் கழித்து கடலுக்கு போனான் அன்று மீதமுள்ள ஆறுபேருக்கு தக்க மீன்களே கிடைத்தது இப்படியாக ஐந்து பிள்ளைகளையும் கொன்றான் எஞ்சிவர்கள் கணவன் மனைவி, கடலுக்கு போனான் இரண்டு பேருக்கு தகுந்த மீன்களே கிடைத்தது, மனைவியையும் கொன்றான், கடலுக்கு போனான் ஒருவருக்கு தக்க மீன்களே கிடைத்தது உட்கார்ந்து யோசித்துப் பார்க்க வீணாக பணக்காரன் ஆக அர்ப்ப ஆசைப்பட்டு ஆறு உயிரைக் குடித்துவிட்டேனே இனி நான் யாருக்காக பணக்காரன் ஆகவேண்டும் என்று அவனும் உயிரை மாய்த்துக் கொண்டான் இக்கதையை யாராவது சொல்லி நீங்கள் கேட்டு இருக்கலாம் அதேபோல்

ஒரு ஊர்ல ஒரு குடும்பத்தில் ஒரு தாய்க்கு அடுத்து அடுத்து அஞ்சி பொண்ணு பொறந்து இருந்தது, அடுத்து மூழ்காம இருந்தாங்க கணவன் வந்து இந்த தடவையாவது ஆம்பளை புள்ள பெக்காம பொண்ணு பெத்தால் தூக்கி கொண்டு போய் வீசி எரிஞ்சிடுவேன் ஏற்கனவே அஞ்சும் பொண்ணா இருக்கு அதுகளுக்குன்னு செலவு செஞ்சி கட்டிக்கொடுக்க ஏங்கிட்ட என்ன இருக்கு ஒன்னுமே இல்லை அதனால் இந்த தடவை பையன் தான் பிறப்பிக்க வேண்டும் என்றான்

மனைவி அதற்கு என்னால என்ன பண்ண முடியும், நான் என்ன கடவுளா என்ன, இல்லை நானாக மாத்தி வச்சிடுறேனா வயிற்றில் இருப்பது குயவன் சக்கரத்தில் குவித்து வருகிற களிமண் இல்லை எதை வேண்டுமானாலும் செய்து கொள்ள, வயிற்றில் இருப்பது குழந்தை அது என்ன உரு எடுத்ததோ அதுவாகவே பிறக்கும் என்றாள்

மனைவி வேண்டாத கடவுளை எல்லாம் வேண்டினாள் கடைசியில் அவள் வேண்டுதலை இறைவன் கேட்க வில்லை என்று பொருள் இல்லை சோதிக்கிறார் போலும் ஆறாவதும் பெண்ணே பிறந்தது

கணவன் கடும் கோபத்தில் எப்போது இருட்டும் இருட்டும் என்று காத்துக் கொண்டிருந்தான் இருட்டி விட்டது குழந்தையை தூக்கிக்கொண்டுபோய் ஒரு இடத்தில் கிடத்தி விட்டு வந்துவிட்டான்

மனைவி காலில் விழுந்து வேண்டாம் என்று கெஞ்சியும் கேட்கவில்லை அவள் அழுகை நின்ற பாடில்லை, குழந்தையை தன் கணவன் கையிலிருந்து பிடுங்க எழுந்து ஓடும் நிலைமையில் அவள் இல்லை

மறு நாள் குழந்தையை விட்ட இடத்தை போய் பார்க்க யாரும் தூக்கி கொண்டு போகாமல் போட்ட இடத்திலேயே கிடந்தது அக்குழந்தையின் அருகில் ஒரு நாய் படுத்திருந்தது கண்டு அதிர்ந்து போனான் அக்குழந்தையை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வந்து விட்டான் நாயும் அவன் பின்னால் சென்றதை அவன் கவனிக்க வில்லை ஆனால் அந்த நாய் அவன் வீடு போய் சேரும் வரை அவனை கவனிக்க மறக்க வில்லை கொஞ்சம் நேரத்தில் அவ்விடத்தை விட்டு அகன்றது

நாயின் எண்ணம் என்னவாக இருந்திருக்கும் குழந்தையை வீட்டுக்குத்தான் தூக்கிக்கொண்டு போகிறானா இல்லை வேறு எங்கேயும் போட்டுவிட தூக்கிக்கொண்டு போகிறானா என்று கவனிக்க இருக்கலாம் என்றல்லவா தோன்றுகிறது

அன்றே மறுபடியும் இருட்டும் நேரம் ஆனதும் தூக்கி கொண்டு போய் வேறு இடத்தில் விட்டு வந்துவிட்டான் மறுபடியும் மறுநாள் போய் பார்க்க குழந்தை அங்கேயே கிடந்தது மறுபடி அந்த நாய் அக்குழந்தைக்கு அருகில் படுத்து இருந்தது, மீண்டும் தூக்கி கொண்டு வந்தான் இப்படியே அடிக்கடி செய்து பார்க்க அவன் வீட்டு வாசலிலேயே நாய் படுத்திருந்தது அவன் குழந்யை வெளியே தூக்கிவர விடுவதில்லை குலைக்க ஆரம்பித்தபோது அதற்கு அஞ்சி நாய் போடும் சத்தம் கேட்டு ஊரார் விழித்துக் கொண்டுவிட்டால் இருக்கும் அரை குறை மானமும் போய்விடும் என்று மனம் உடைந்து தூக்கி போடுவதை கை விட்டு விட்டான்

மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது அது ஆண் குழந்தை யாக இருந்தது மனைவி ஆனந்தம் அடைந்தாள் கணவன் வந்து என்னை பாராட்டு வார் என்ற ஆனந்தம் அவளுக்கு

கணவன் வந்தான் அவள் எதிர்பார்த்தபடி அங்கே கணவன் நடந்து கொள்ளா ததைக்கண்டு மனைவி முகத்தில் அசடு வழிந்தது ஏன் என்ன ஆனது உங்களுக்கு இப்போது நீங்கள் வரமா வரம் கிடந்த ஆண்தானே பிறந்திருக்கிறான் என்ன முகத்தில் சோகம் என்று கேட்டாள்

நமது மூத்த மகள் இறந்து விட்டாளடி என்றவாரு ஓவென கதறியழுதான் அதை கேட்டு மனைவியும் அழுது வாரி அடக்கம் செய்தார்கள்

அடுத்து இன்னொரு ஆண் குழந்தை பிறந்தது இக்குழந்தை பிறந்ததும் இளையவள் இறந்து விட்டாள் அப்போதும் ஆனந்தம் அடைய கொடுத்து வைக்கவில்லை

இப்படியாக ஐந்து ஆண்குழந்தைகள் பிறக்க பிறக்க இருந்த ஐந்து பெண் குழந்தைகளும் மாண்டு விட்டது கடைசியில் மிஞ்சியது வீசி எரிய போன ஒரு பெண் குழந்தையும் மற்றும் ஐந்து ஆண்குழந்தைகள் தான்

சில நாள் கழித்து தாய் உடல் நிலை சரியில்லாததினால் அவளும் போய் சேர்ந்தாள்

ஐந்து ஆண் மகன்கள் பெரியவர்கள் ஆனதும் ஆளுக்கு ஒருத்தியை பிடித்துக்கொண்டு தந்தையையும் பெண்ணையும் அம்போ என்று விட்டுவிட்டு ஒதுங்கி கொண்டார்கள்

வயதான தந்தை இன்றைக்கோ நாளைக்கோ இப்பவோ எப்பவோ இன்னும் கொஞ்சம் நேரத்திலோ என்று இருக்கிறார்

அவரால் தானாக உணவை அள்ளி உண்ண முடியாது, அந்த தூக்கிட்டு போய் போட்டுவிட இருந்த பெண்தான் ஊட்டி விடுவாள்

தந்தை தன் மகள் ஊட்டும் ஒவ்வொரு வாய்க்கும் கண்ணத்தில் கண்ணீர் வடிந்த வண்ணமே வாங்குவார்

வாய் சோறு தெறிக்க அம்மா.... என்று கதறிய வாறு என்னை மன்னித்து விடும்மா, என்னை மன்னித்துவிடு, ஐந்து ஆண் பிள்ளைகள் பெற்றும் கஞ்சி ஊற்றி உண்டறியேன், கடைசியில் மூச்சை விட்டால் கொல்லி போட ஒன்று கூட என் அருகில் இல்லை இதற்கு தானா ஆண் குழந்தை மட்டும் வேண்டும் என்று வரமா வரம் கிடந்தேன் கடைசியில் எந்த குழந்தையை வேண்டாம் என்று தூக்கி போட போனேனோ அதுதான் கல்யாணம் கூட பண்ணிக்காமல், எவனையும் ஏறெடுத்து பார்க்காமல், எவனையாவது விரும்பியிருந்து விரும்பிவனோடு ஓடிப்போகாமல் என் அருகில் இருந்து என்னை கண்ணும் கருத்துமாக கவனிக்கிறது

நான் உன்னை வேண்டாம் என்று தூக்கி போட்டதும் யாராவது உன் மேல் பரிதாபம் பட்டு உன்னை தூக்கிக்கொண்டு போய்விட்டு இருந்திருந்தால் இன்று என் நிலமை என்னவாக ஆகியிருக்கும் தாயே, என் குலதெய்வமே கண்ணீர் மல்க அழுதார்

ஆனால் ஒரு அதிசயம் உன்னை போட்டுவிட்டு வந்து விட்டு , விடிந்ததும் போய் பார்பேன் ஒரு நாய் உன் அருகில் படுத்திருந்தது அது தான் யாரையும் தூக்க விடாமல் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது தாயே

கடைசியில் அந்த நாய் வீட்டுக்கு வந்து விட்டது, அப்போது நான் உன்னை தூக்கிக்கொண்டு வெளியேறிய போது என்னை பார்த்து குலைத்து வெளியில் போகவிடாமல் தடுத்தது அதோடு விட்டுவிட்டேன் தூக்கி போடும். எண்ணத்தை தாயே

ஆண்டவன் என்னை கவணிக்கவே உன்னை எனக்கு திருப்பி நாய் மூலமாக எச்சரிக்கை படுத்தி திருப்பி கொடுத்விட்டானம்மா, அம்மா தாயே உன் காலை காட்டம்மா சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி என் உயிரை உன் பாதத்தில் காணிக்கையாக விட்டு கொள்கிறேன் என் குலதெய்வம் அம்மா நீ

அப்பா.... என்று கதறிய வாறு அப்பா காலை பிடித்து அழுது தீர்த்தாள்

அம்மா அடுத்த ஜென்மம் என்று ஒன்று உண்டு என்றால் உன் வயிற்றில் நான் உனக்கு பிள்ளையாக பிறந்து உனக்கு மகனாக பணிவிடை செய்ய வேண்டும் என்று கடவுளை கெஞ்சிக்கிட்டே இருக்கேம்மா

அம்மா நீ எனக்கு மகள் இல்லை என்னை பெத்த தாயம்மா என்று கதரும் தந்தைக்கு பாதுகாப்பாக இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா

அவள் வேறு யாருமில்லை அது நான்தான்

மாணவர் எல்லாரும் சடாலென "மேடம்" என்று இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டார்கள்

இச் சோக கதையைக்கேட்ட டியூசனுக்கு வந்த மாணவர்கள் அத்தனை பேரும் கண்கலங்கியவாறு எங்களை மன்னித்து விடுங்கள் மேடம்

இனிமேல் நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை நாங்களே படித்துக் கொள்கிறோம், நல்ல பர்சண்டேஜ் எடுப்போம் மேடம் என்று தங்கள் கண்களை துடைத்துக் கொண்டார்கள்.

°°°°°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்"

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (10-Nov-18, 11:19 am)
பார்வை : 316

மேலே