துணிவொன்றி என்னொடு சூழாது எழுநெஞ்சே – நாலடியார் 55
இன்னிசை வெண்பா
கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழா(து) எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு. 55
- துறவு, நாலடியார்
பொருளுரை:
இளமைப் பருவமும் வீணே கழிந்தது, உடனே நோயோடு கிழத்தனமும் வரும், ஆதலால், துணிதல் பொருந்தி என்னோடு ஆராயாமல் புலன்களின் வழியிற் செல்கின்ற நெஞ்சமே! நல்வழி உண்டாக நீ என்னுடன் வருகின்றனையா?
கருத்து:
புலன்வழிச் செல்லுதலைத் தவிர்த்து மனத்தை அறவழியிற் செலுத்துதல் வேண்டும்.
விளக்கம்:
கழிந்தன்று - கழிந்தது; இன்னே - உடனே என்னும் பொருட்டு; இது நெஞ்சத்தின் இயல்பு கூறித் திருத்தியபடியாம்.