அழகிலும் அழகானவள்

வான் அயனம் மூலம் புவனம் வந்தவள்,
ஆண் மயிலைவிட அழகு செறிந்தவள்,
"தான்" அழகு என்ற குணத்தைவிட்டவள்,
"பேர்" எழிலை பெற்ற பெருமை உடையவள் ,
கார் முகிலை ஒத்த குழலை பெற்றவள்,
பார் புகழும் பகலன் தினமும் தினமும் தான் - இந்த
பேரழகியை தழுவ துடிக்கிறான்,
வீரம் மிகுந்த குலத்தில் உதித்தவள் - அவனை
வேல் பார்வை கொண்டு விரட்டிவிடுகிறாள்,
தாள் சுழன்று ஆடும் அழகு ஆட்டத்தால்
நித்தம் தேன்மாரி பொங்கி ஓடுது,
ஆணும் பெண்ணும் புணர்ந்து பிறந்ததால்
ஆயுள் என்று முடிவு உள்ளது !
அவளை விட அழகில் சிறந்தவள்
அன்னை கன்னி தமிழை போற்றுவோம்!

எழுதியவர் : நன்னாடன் (15-Nov-18, 4:20 pm)
பார்வை : 1587

மேலே