இழைந்தோடும் மெல்லிய எல்லைக்கோடு
தென்றலும் புயலும் ஒன்றென்பேன்
ஆதாரம் காற்றென்பதால் ,
சுடரும் காட்டுத்தீயும் ஒன்றென்பேன்
தொடக்கம் சிறு தீப்பொறியென்பதால் ,
மழை சாரலும் பெருவெள்ளமும் ஒன்றென்பேன்
தொடக்கம் சிறு துளியென்பதால் ,
சிறுபூண்டும் பெரும்காடும் ஒன்றென்பேன்
தொடக்கம் சிறு விதையென்பதால் ,
இரவும் பகலும் ஒன்றென்பேன்
இடைவெளி சிறு ஒளி என்பதால் ,
ஆண்மையும் பெண்மையும் ஒன்றென்பேன்
அடிப்படை ஒரு உயிர் என்பதால் ,
இழைந்தோடும் மெல்லிய எல்லைக்கோடு
அழிந்தோடும்போது ....
ஒன்றென்பேன் எல்லாமே ஒன்றே என்பேன் .