ஆசை அண்ணணே

ஆசை அண்ணணே
அன்னையும் தந்தையுமானவனே
ஆயிரம் இன்னல் நேர்ந்தாலும்
அகிலமே நம் காலடியில்!!!

நெஞ்சத்தில் தூளி கட்டி எனை
நித்தமும் சுமக்கின்ற தெய்வமே
மறுபிறவி ஒண்ணு இருந்தா
மகளாக பிறக்கணும் உனக்கு

வஞ்சி எனை விஞ்சிடும்
வஞ்சகர் களை வீழ்த்தி
வையத்தில் வாழ்ந்திடும்
விந்தையை கற்றுக் கொடு

உப்பு மூட்டை நீ தூக்க
உலகமே என் வசமாய்
உனக்கும் எனக்குமான பாசம்
உலகம் ஓயும் வரை நிலைக்கும்!!

எழுதியவர் : உமாபாரதி (16-Nov-18, 10:52 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 424

மேலே