எனை ஏதாே செய்கிறாய்

இராத்திரியின் நீளத்தில் துயில் கலைந்து
விழித்திருந்த இராப் பாெழுது
உன் நினைவுகளாய் வந்து
எனை ஏதாே செய்கிறது
ஔிரும் பால் நிலவாே
மின்னும் நட்சத்திரமாே
அழகாகத் தாேன்றவில்லை
அணணார்ந்து பார்த்த விழிகளுள்
உன் முகமே அழகாய் தெரிகிறது
எங்காே ஓர் தாெலைவாய்
நீ சென்ற பின்னும் தேடும் கண்களில்
நீர்த்துளியே பதிலாக...
நினைவுகளை மீட்டியபடி
எங்கே என்று தேடும் இதயம்
ஓசையின்றி அமைதியாகி
எனை ஏதாே செய்கிறது
காதல் செய்த மாயம்
எனை ஏதாே செய்கிறது
காத்திருப்பு நீண்டு பாேகிறது
கனவுகள் இன்னும் புதிதாய் மலர்ந்து
எனை ஏதாே செய்கிறது
நினைவாய் என்னுள் வாழ்பவளே
எனை ஏதேதாே செய்கிறாய்
என் இதயம் பறித்தவளே
என் சுவாசமானவளே
எனை ஏதாே செய்கிறாய்
இது தான் காதலா...

எழுதியவர் : அபி றாெஸ்னி (17-Nov-18, 9:21 am)
பார்வை : 535

மேலே