ஜாதி வெறி

அவனும் அவளும்
உள்ளத்தால் ஒன்றானார்கள்
அவன் கீழ் ஜாதி
அவள் மேல் ஜாதி - இவர்கள்
காதலித்து மணம்முடிக்க
வீட்டாரை கேட்கையில்
அவள் வீட்டார் ஒப்பவில்லை
இவ்விருவர் வேறு வழியின்றி
இறைவன் சந்நிதியில் மாலை மாற்றிக்கொண்டு
கணவன் மனைவியாய், இல்வாழ்க்கை தொடங்க
மனதால் ஒன்றிய இவர்களை வாழவிடவில்லையே
தான் பெற்ற பிள்ளை என்பதையும் மறந்து
ஜாதிவெறி தலைக்கேற வாழவேண்டிய காதலரை
வெட்டி வீழ்த்தினார் மாயும்வரை துடிதுடிக்க

உள்ளத்தால் சேர்ந்தோராய் வாழ்த்தி வாழவைக்காது
இப்படி கொடூரமாய் ஜாதிப்பெரில் கொலை செய்வோரை
எப்படி தடுப்பது, யார் தடுப்பார்
ஜாதியால் பேதம் பார்க்கும் சமுதாயம்
என்று மாறும் , மாறுமா , இதற்கு விடை
கிடைக்கும் நாளும் வருமா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-18, 6:36 pm)
Tanglish : jathi veri
பார்வை : 79

மேலே