==================================ருத்ரா

அவளுக்கு எழுதலாம்
என்று நான்
ஒரு காகிதம் எடுத்தேன்.
அதில் ஒரு ஈ
ஏன் என்னை தூது அனுப்பேன்
என்றது
"நீ நோயை அல்லவா பரப்புவாய்."
என்றேன்
"காதலும் ஒரு நோய் தானே"
என்று
அது ரெக்கையை உரசி உரசி
வலித்துக்காட்டியது.
ஈ ஒரு முத்தம் என்று
எத்தனை நாள்
உன்னைக்கேட்டிருப்பேன்.
ஈயவில்லை என்று
ஈக்கும் தெரிந்திருக்கிறது.
தூது விட
உனக்கு எதற்கு அன்னமும் கிளியும்?

என்னைப்பார்த்து கேட்டது.
ஈ என இளித்தேன் ஈயிடம்.

=====================================











=========================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (20-Nov-18, 10:18 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : yee
பார்வை : 72

மேலே