நாய் என்றும் நன்றி மறக்காது

நாய் என்றும் நன்றி மறக்காது
*************************************************
உயிரில்லாப் பொருளுக்கு அலைமோதும் மனிதர்கள்
உயிராம் பெற்றோரை காப்பகத்தில் விட்டுவிட்டு
மயிர்நீக்கி நேர்த்தியாம் துயர்களைய வழிபாடாம்
தயிரோடு தேன்கலந்து தேவிக்கு நீராட்டம்
அயிராவத ஊர்தியான் இந்திரனை மகிழ்விக்க
ஆயிரம்பேர் கொண்டு ஆ நெய்யால் ஆகுதியாம்
பாயிரம் ஓதிவைத்து பாயசம் வடைபடைப்பு
கோயிலாம் தாய் ஒறுத்து " தாய்ப்பாசம் " சொற்பொழிவு
பேய் ஆம் இவர்செயலில் பெற்றோர்கள் நிர்க்கதியில்
நாயோ இவர்கள் ; அதுநன்றி மறக்காதே !

(சமுதாய விழிப்புணர்வுக்காக )

எழுதியவர் : சக்கரைவாசன் (24-Nov-18, 3:08 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 37

மேலே