ஏ கஜா புயலே

மழைக்காக தவமிருந்தோம்
மறுக்கவில்லை நாங்கள்
மனிதம் இழந்தாய்
மனிதன் ஆனாய்

சுற்றும் சூறாவளியாய்
காளியாட்டம் ஆடி
கள்வெறி கொண்டு
கயவன் ஆனாய்

இருப்பிடம் இழந்தோம்
இன்னலுக்கு ஆளானோம்
இடுகாட்டிற்தகும் சென்றோம்
இதயமில்லா இயற்கை ஆனாய்

எழுதியவர் : உமாபாரதி (24-Nov-18, 4:33 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 125

மேலே