பாடுவார் பசிதீர்ப்பாய்

பாடுவார் பசிதீர்ப்பாய்
*************************************

பண்ணிடை தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருள் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீயன்றோ

பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக உண்பலி புழல்வோனே
காடுநின் இடமாக கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றோ
-
- - - - - (- - சுந்தரர் தேவாரம் --) - - - ( - - பகிர்ந்தது சக்கரைவாசன் -- )

எழுதியவர் : பகிர்ந்தது சக்கரைவாசன் (25-Nov-18, 12:53 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 83

மேலே