மரித்து போவேனடி
புன்னகையோடு வரவேற்க
பூக்களோடு காத்திருந்தேன்
புயலாக வந்தாய்
பூகம்பம் ஆனாய்
கண்ணகியாய் உருமாறி
கண்களால் சுட்டெரித்தாய்
ஏந்திழையே
ஏனடி இப்படி செய்தாய்
சொற் குற்றம் கண்டாயா
பொருள் குற்றம் கண்டாயா
புரியவில்லையடி எனக்கு
பித்தாகி அலைகிறேன்
பிரிந்து போகாதேடி
மரித்து போவேனடி
மாது நீ இல்லையென்றால்!!!