மேற்கில் -----நையாண்டி மேளம் 2

மேற்கில்


வயோதிகம்
அரவணைக்கும் பருவம்

கண்களை ஈர்த்தன
வாராந்திரியில் வந்த

புதுமுக நட்சத்திரங்கள்

மேல் பூச்சு இல்லாவிட்டால்
அழகு சுமார் தான்

மனதில் பளிச்சென்று
தோன்றி மறைந்தது ஒரு முகம்

திருமண ஆல்பத்தைப்
புரட்டினேன்

என் பக்கத்தில் வசீகரமாய்
மணப்பெண்

உழைப்புக்கும் உயர்வுக்கும்
பங்களித்த நான்

உன் இளமைக்கு நியாயம்
செய்யத் தவறிவிட்டேனோ

திரும்பிப் பார்த்தேன் -

சிரித்துக் கொண்டிருந்தாள்
மனைவி எதிரில் !

எழுதியவர் : Dr A S KANDHAN (27-Nov-18, 1:27 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 65

மேலே