மண்ணை நம்பினேன்

ஏனோ யாரையும் நம்ப மனம் வரவில்லை
மண்ணே உன்னை மட்டும் நம்புகிறேன்
பிறந்ததும் உனக்கும் எனக்கும் உள்ள பந்தம் பிரிக்க முடியாதே.....
நான் தவழ்ந்த பொழுது உன்னை ஊன்றியே நான் நடந்தேனே
நான் விழுகையலும் கவலைக்கொள்ளாதே உன்னைத்தாங்குவேன் என்று தாங்கினாய்
நான் எழுந்து நடக்க நீயும் என் பாதங்களை உன்மேல் பதியவைக்க
அனுமதி கொடுத்தாய்
நான் உண்ணும் உணவினை நீ கொடுத்தாய்
நான் பருகும் நீ கொடுத்தாய்
எல்லாம் நீ எந்தி எனக்கு கொடுக்கையிலே
நான் எல்லாம் மடி ஏந்தி வாங்கினேன்
இந்த யாக்கையும் ஒரு நாள் அழியுமே
அதை வீணென்று தூக்கி எறிகையிலே
வளர்த்த எனக்கு உன்னை மீண்டும் தாங்க முடியாதா என்று மண்ணில் புதைக்கையிலே...
என்னை அன்புடன் வரவேற்பாயா
மண்ணே
உம்மை அஃறிணையென்று கூறும்போது ஏனோ நீ உயிருள்ளவன் என்றே தோன்றவே
நீ தரும் உதவிகளை எண்ணமால்
உம்மை அசுத்தம் செய்யும் மாக்களில் ஒருத்தியாய்
மனதில் உருக்கத்துடன்....

எழுதியவர் : பிரகதி (28-Nov-18, 11:34 am)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : mannai nambinen
பார்வை : 349

மேலே