தனிமை
கண்ணீர் துளியை
துடைத்திட யாருமில்லை,
கடவுளுக்கு தெரிந்தும்
அவனுக்கு நேரமில்லை.
துடிக்கும் இதயத்தை
நிருத்த முடியவில்லை,
துடிப்பதே உனக்காகத்தான்-என
தெரிந்ததால் அதைசெய்ய மனமுமில்லை.
ஏங்கிடும் மனதிற்கு
தெரியவில்லை,
தான் ஏங்கிடும் ஏக்கத்திற்கு
விடைதான் ஏதுமில்லை.
பாதைகள் துளியும்
குறையவில்லை,
தனிமையின் தூரத்திற்கு
ஏதும் எல்லையில்லை.
வருமையின் ஈரம்
காயவில்லை,
இருந்தும் உனை மறந்து வேரொரு
வழிதேட தோன்றவில்லை.
உள்ளத்தின் காயங்கள்
ஆரவில்லை,
பக்கத்தில் அணைத்து முத்தமிட
நீயுமில்லை.
கனவிலும் காட்சிகள்
முடியவில்லை,
அறிந்தேன்
இதுவே தனிமையின் கோர எல்லை.