மனிதனின் நியதிகள்
கரும்பாய் இனிக்கும் பேச்சிலும்
கசக்கும் சுவை இருக்கும்
இரும்பாய் இருக்கும் மனதிலும்
இரக்கம் ஊற்றாய் ஓடிவரும்
நெருப்பாய் இருக்கும் நெஞ்சத்திலும்
நீராய் ஆறுதல் தேடிவரும்
பொறுப்பாய் இருக்கும் மனிதனுக்கும்
சிறப்பும் சினமும் கூடிவரும்
வெறுப்பும் விரக்தியும் எண்ணத்திலே
துறக்கும் வாழ்வு துறவிலே
அறமும் அன்பும் நேரிலே
தரமும் பயனும் கரத்திலே
வறுமையும் வாழ்வும் மனதிலே
உறுதியும் உழைப்பும் உடலிலே